பெண்வேட்டையாட சோபாசக்தி பூண்ட தலித் வேடம்
சரக்கடி மன்னன் சோபா சரக்கு: பொருள் (ஈழம்) மாது, (தமிழகம்) மது
யாழ்ப்பாண வெள்ளாளனான ஷோபாசக்தி தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்காக தலித் எழுச்சி நடைபெறும் தமிழகத்தில் தன்னை பிரபல்யமாக்கவும் பெண்வேட்டை ஆடவும் தான் ஒரு தலித் என்கிற பொய்யை மோசடியை செய்தார். ஒரு வடிவேல் திரைப்பட காமெடியில் சேவல் வேடம்போட்டு திருட வந்தவன் தானே நீ என்று மன்சூர் அலிகான் கேட்பாரல்லவா. அதுபோல தலித் வேடம்போட்டு தன்னோடு படுக்க வந்தவரே இந்த ஷோபா சக்தி என்பதை பெரியாரிஸ்டும் தலித் செயற்பாட்டாளருமான பிரான்ஸ் தமிழச்சி உறுதிப்படுத்தியுள்ளார். தான் தமிழச்சியோடு படுத்தேன் என்பதை ஷோபாவே ஒத்துக்கொண்டுள்ளார். பின்வருவது கீற்று இணையத்தளத்தில் வந்த சோபாசக்தியின் மோசடியான தலித் வேடத்தை மிக வலுவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய கட்டுரை. - பிரதம ஆசிரியர், Jaffnafashion.com
சோபாசக்தியின் கலைந்துபோன தலித் வேடம்
“50 வருஷத்திற்கு முன்பு வரை ஈழத்தில் தலித்துகள் மேலாடை போட இயலாது. பாட்டன் வேட்டி கட்ட இயலாது. கோயிலுக்குள் போக இயலாது. வெளியில் நின்று தேங்காய் உடைக்க இயலாது. தங்க நகை அணிய இயலாது. பாயாசம் வைக்க இயலாது. இது சட்டம். பொங்கல் நாள் தினத்தன்று காலையில் வைத்த ஆறிப்போன பொங்கலை நயினார்கள் சிறைக்குட்டிகளுக்குப் போடுவார்கள். இது தமிழர் விழாவா இல்லை சாதி இந்துக்களின் விழாவா? இதே கேள்வியைத்தான் இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்க்கிறேன். தலித்துகள் எழுத வரும்வரை தலித்துகளின் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ஒரு கே.டானியலும் பூமணியும் வரும்வரை தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் இடம் என்ன? எதுவுமே இல்லையெனில் இந்தப் பாழாய்ப்போன தமிழ் இலக்கிய மரபுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? (அழுத்தம் நம்முடையது) அப்படித் தப்பித் தவறி ஆதிக்க சாதியினர் தலித் மக்களைக் குறித்து எழுதிய தருணங்களெல்லாம் தலித்துகளைக் கேவலப்படுத்தியும் நையாண்டி செய்துமே தங்கள் பிரதிகளைக் கட்டமைத்திருக்கிறார்கள்."
மேலுள்ளது 'தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா?' என்ற தலைப்பில் சோபா வல்லினம் இலக்கிய சந்திப்பில் மலேசியாவில் பேசியது . அரசியலின் அடிப்படைகளை கரைத்துக் குடித்தாக தம்பட்டம் அடிக்கும் சோபாவின் வாயிலிருந்து மேலே சொன்ன வார்த்தைகள் வாய் தவறி வந்ததா இல்லை தண்ணியைப் போட்டபின்பு வந்ததா?. இதுமட்டுமல்ல அவர் போட்ட தலித் வேடத்திற்கு ஆதாரமாக இன்னும் பல கருத்துக்களை, சோபாவின் எழுத்துக்களை நம்மால் வைக்க முடியும். சரி இப்போது அவை என்னென்ன என்பதை நாம் பார்ப்போம்.
தோழர் கவின்மலர் எழுதிய அந்தோணியின் கதையே சோபாவின் தலித் வேடத்திற்கு முதலான ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. அது என்னவெனில்
“அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில். அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது. அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும். இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம் கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில் “அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!” என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான். ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான்."
கதையை போனபோக்கில் படிப்பவர்களுக்கு அந்தோணி ஒரு பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் படும். லீனா மணிமேகலை சொல்வதுபோல் பிரதியின் ஜட்டியை கழட்டிப்பார்க்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை என்றாலும் கதையின் ஜட்டியை கழற்றிப் பார்க்காமலேயே உள்ளே இருப்பது என்னவென்று இந்தக்கதையில் நன்றாகத் தெரியும். ஆனால் தோழர் கவின்மலர் என்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது நான் அவர் தலித் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை என்று சொன்னார், நல்லதுதான். அதுபோக அவர் இன்னொன்றும் சொன்னார் சோபாசக்தி கறுப்பாக இருப்பதால் அவரை தலித் என்று அனைவரும் நினைத்திருக்கலாம் என்று, அதுவும் நல்லதுதான்.
தோழர் கவின்மலர், சோபா தனக்கு வழங்கிய நேர்காணலை முன்வைத்து, தான் எழுதிய கதையில் வரும் அந்தோணி அல்லைப்பட்டியின் பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்று வாசிப்பவருக்குப் பட்டாலும், அதுபோல் அந்தோணி இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அவர் கருப்பாக இருப்பதால் அனைவரும் தலித் என்று தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று தோழர் கவின்மலர் சொன்னதுபோலவே வைத்துக்கொள்வோம். ஆனால், தமிழீழ தேசியத் தலைவர் பெயரைக் குறிப்பிடும்போது 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என்று வலிந்து எழுதும் (பிரபாகரன் வெள்ளாளர் இல்லை என்பது வேறு கதை) கவின்மலரோ, சோபாசக்தியோ ஒரு இடத்தில் கூட சோபாசக்தியின் வெள்ளாளப் பின்புலம் குறித்து எழுதவில்லையே ஏன்? அது என்ன பெரிய வாழ்க்கை வரலாறு? தலித்துகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அவரின் சாதியப்பின்புலம் வேண்டுமென்றே கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டதா? அல்லது அவர் கேட்டுக்கொண்டபடியால் விடப்பட்டதா?
'நான் கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவன்' என்று வெளிப்படையாக பெரியார் அறிவித்ததுபோல், அந்தோணியின் கதையில் சோபாவின் பின்புலம் ஏன் அறிவிக்கப்படவில்லை? காரணம் எளிது... திட்டமிட்டு சோபா தலித் வேடம் போட்டு வருகிறார். அதை அவர் நண்பர்கள் தெரிந்தே மறைத்தார்கள். இப்போது வேடம் வெளிப்பட்டவுடன் இது அப்போதே எங்களுக்கு தெரியுமே என்று நாவினிக்க பொய்யுரைக்கிறார்கள்.
தனக்கு காஃப்காவைத்தெரியும், கத்தரிக்காயைத் தெரியும் என்று தம்பட்டம் அடிக்கும் சோபா, மேலே சொன்ன கருத்துக்களை சும்மாக்காச்சுக்கும் சொல்லிவிட்டேன் என்று சொல்லப்போகிறாரா? இல்லை திருந்தி ஆம் தலித்வேடம் போட்டேன் என்று ஒத்துக்கொள்ளப்போகிறாரா?
தலித் அரசியல் பேசினால் முக்கியமாக ஈழத்து புலத்திலிருந்து வந்த ஒருவர், அதுவும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர், தலித் அரசியல் பேசினால் அது நன்றாக எடுபடும் என்பது சோபாவின் பித்தலாட்ட மூளைக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக தோழர் தமிழச்சி சொன்ன வார்த்தைகளை வாசகர்கள் நினைத்துப் பாருங்கள். அவர் சொல்கிறார்.
“என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார். 'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது."
தலித் அரசியலுக்கு இந்த காலச்சூழல்களில் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் அதன் வலிமையான பாரதூரங்களும் சோபாவுக்கு நன்றாகத் தெரியும் (பல ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்ட கோடானுகோடி தலித்துகள் அதிகாரத்திற்கு எதிராக எண்ணற்ற தியாகங்களோடும் அவமானங்களோடும் போராடி தற்போதைய பத்தாண்டுகளில் பெரும்பாடு பட்டு ஒடுக்குமுறைக்கெதிராக வென்றெடுத்த அங்கீகாரம் இது). அந்த அங்கீகாரத்தை அடித்தளமாகக்கொண்டு புகழை அடையவேண்டும் என்பதற்காக சோபா திருட்டுத்தனமாக எடுத்த அலாவுதீனின் அற்புத விளக்கே இந்த தலித் வேடம். லீனா எப்படி கார்ல்மார்க்ஸின் ஜட்டியைக் கழட்டினால் மகஇக தோழர்கள் கொதிப்பார்கள், அதுமூலமாக தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ளலாம் என்றும், அந்தப்பயல் இந்தப்பயல் என்ற எழுதினால் பெயர் கிடைக்கும் என்றும், பாலியல் கவிதைகளை (நான் பாலியல் கவிதைகளை எழுதக்கூடாது என்று சொல்லவேயில்லை, மாறாக இந்த கவிதாயினியின் கவித்துத்துவ ஆழ அகலத்தை நன்கு படித்துவிட்டுத்தான் சொல்கிறேன்) தளமாக பயன்படுத்திக்கொள்கிறாரோ, அதைப்போல சோபா தன்னை, தன்பெயரை பிரபலப்படுத்த பயன்படுத்திய உந்து பலகைதான் இந்த தலித் வேடம்.
இந்த தலித் அடையாளத்தை அவர்மேலே சொன்ன வல்லினம் அரங்கில் சொன்னதுபோல் பல இடங்களில் அதாவது பேசும்போது வெளிப்படையாகவும் (தோழர் தமிழச்சியிடம் மற்றும் பலரிடம்), எழுதும்போது பூடகமாகவும் கட்டமைக்கிறார். இல்லை நான் அப்படிப் பேசவில்லை, நான் ஒருமாதிரி பேசியதை அவர் வேறுமாதிரியாக பதிவு செய்து விட்டார் என்று சோபா கருதியிருந்தால் வல்லினத்திற்கு அவர் தனது மறுப்பை எழுதியிருக்கவேண்டும். வாசகர்கள் இது என்ன பெரிய விடயமா என்று கேட்கலாம். ஆனால் தலித் அரசியலில் தலித் அல்லாத ஒருவர் தானும் தலித் என்று காட்டிக்கொள்வது பெரிய விடயம் மட்டுமல்ல, மாபெரும் அயோக்கியத்தனம். சரி இனி இவர் எப்படி தனது கதைகளிலும் கட்டுரைகளிலும் தான் ஒரு தலித் என்னும் பிம்பத்தை பூடகமாக கட்டமைக்கிறார் என்பதை கட்டவிழ்த்துவிடுவோம்.
'விலங்குப்பண்ணை' என்ற தான் எழுதிய கதையில் வரும் ஒரு தலித் கிறித்தவ அந்தோணியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதால் தானும் ஒரு தலித்துதான் என்னும் பிம்பத்தை உருவாக்குவார் சோபா. தலித் என்ற பிம்பம் மெல்ல மெல்ல ஆனால் மறைமுகமாக கட்டப்படும். அதாவது இயக்குனர் தரணி என்னதான் கதை குப்பையாக பிற்போக்குத்தனமாகதாக இருந்தாலும் தன் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதுபோல் இங்கு சோபா ஒரு சாதாரண கதையில் தானும் ஒரு பங்காளனாக, ஒரு பார்வையாளனாக நுழைந்து தன் எழுத்தின் மூலம் கதையின் விறுவிறுப்பைக் கூட்டுவார். கதையின் விறுவிறுப்பில் கதையின் ஊடே சோபா சொருகும் கத்தி வாசகர்களுக்கு உறைக்காது. வாசகனின் அடிமனதில் தான் ஒரு தலித்துதான் என்ற பிம்பத்தை அவரின் எழுத்து கட்டமைக்கிறது. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதைக்கூட சோபா வெளிப்படையாகச் சொல்ல மாட்டார். ஆனால் கதையின் வரும் இதர பாத்திரங்கள் அந்த முக்கிய பாத்திரத்தை திட்டுவது, அவரின் சாதியை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திவிடும்.
மெல்ல அக்கதையின் முக்கிய கதாபாத்திரம் குறியீடாக மாறும். வாசகர் மனதில் அக்கதாபாத்திரம் குறிப்பிட்ட தலித் சாதியின் பிம்பமாக உருப்பெற்றவுடன் இவர், அதாவது கதையில் கதைசொல்லியாக வரும் கதாபாத்திரம் மெல்ல தன்னை அந்த தலித் சாதியைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரத்தோடு அடையாளப்படுத்திக்கொண்டு தானும் ஒரு தலித் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளும். மெல்ல மெல்ல வெளிப்படையாக யாரும் கண்டறியாதவண்ணம் சோபா இந்த அடியறுக்கும் வேலையை செய்து முடிப்பார். இல்லையில்லை சோபாவின் கதையை வெறும் கதையாகத்தான் பார்க்கவேண்டும் என்று சொல்பவர்களுக்கு சோபா தனது கதையை ஒரு நீண்ட அரசியல் பிரச்சாரம் என்று சொன்னதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
உதாரணமாக மேற்சொன்ன கதையில் ஆரம்பமே கதைசொல்லியான ஜெ.அன்ரனி மற்றும் ம.அன்ரனி ஆகியோருக்கு இடையே இருக்கும் ஒற்றுமையோடுதான் ஆரம்பமாகும்.
"ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் பிரிக்கப்பட்டிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பிரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். எல்லாவற்றையும்விட எங்கள் இருவரது பெயர்களும் ஒன்றாகவிருந்தன. நான் ஜெ.அன்ரனி, அவன் ம.அன்ரனி."
இப்படியாக இருவரும் ஒரே பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பிம்பம் முதலில் வாசகர்கள் மனதில் கட்டப்படும். பின்பு கதையின் ஒரு இடத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரமான ம.அன்ரனியை ஆசிரியர் அவன் சாதியை பூடகமாகச்சொல்லி திட்டுவார்.
"ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் கந்தையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார்."
இதுதான் சோபாவின் ஸ்டைல். யாருடைய சாதியையும் நேரடியாகச் சொல்லாமல் ஆனால் மக்கள் மனதில் படிந்திருக்கும் படிமங்கள் மற்றும் கதையில் அவர் உருவாக்கும் குறியீடுகள் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தின் சாதியைச்சொல்லி அந்த சாதியைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரத்தோடு தன்னை அதாவது கதைசொல்லியை அடையாளப்படுத்திக்கொண்டு தான் தலித் என்ற பிம்பத்தை கட்டமைப்பார். இதற்கு உதவியாக அவரின் நிறமும் இருந்தது அவருக்கு வசதியாக இருந்தது.
சோபா சக்தி 2007 பாரீஸ் மாநாட்டிலும் தலித் வேடம் கட்டியிருக்கிறார். அந்த மாநாடு குறித்த புதிய மாதவி எழுதிய கட்டுரை சோபாவின் இணையத்திலேயே இருக்கிறது.
"தலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி ‘அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்’ என்று கொஞ்சம் சூடாகக் கலந்துரையாடலில் சொன்னதும் ‘நானும் தலித் தான்’ என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது."
மக்களின் பொதுப்புத்தியில் படிந்திருக்கும் அதாவது தலித்துகள்தான் தலித் அரசியல் பேசுவார்கள் என்ற பிம்பத்தை இதுமாதிரியான கட்டமைப்புகளின்மூலம் தட்டியெழுப்பி அதை தனது எதிர்காலத்திற்கு பயன்படுத்திக்கொண்டார் சோபா.
சோபாவின் பித்தலாட்டம் எந்தளவிற்கு தமிழகத்தில் சென்றடைந்திருக்கிறது என்பதை உரசிப்பார்ப்பதற்காக 'சோபாசக்தி என்ன சாதி தெரியுமா?' என்று பலரிடம் கேட்டபோது, 'சோபாசக்தி தலித்துதான்' என்று அவர்கள் அடித்துப் பேசியதும், உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டபோது, 'அப்படித்தானேப்பா அவரது படைப்புகள் இருக்கின்றன' என்று சொன்னதும், சோபாவின் வேடம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்பதை உணர்த்தியது.
'கார்ல் மார்க்சுக்கு கள்ள உறவு இருந்தது; அதை ஒப்புக்கொள்ள இந்த மகஇக மறுக்கிறதே' என்று ஒப்பாரி வைக்கும் சோபா இப்படி ஒரு ஏமாத்து வேலையை செய்ததன் காரணமென்ன? கார்ல் மார்க்சு அப்படி ஒரு உறவு வைத்திருந்தால் அதை ஒப்புக்கொள்வதில் பொதுவுடமைவாதிகளுக்கோ ஏன் கார்ல்மார்க்சுக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏனெனில் மார்க்சியத்தின் புனிதம் ஒன்றும் மார்க்சின் ஆணுறுப்பில் வைக்கப்படவில்லை. ஆனால் தலித்வேடம் போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த சோபாவுக்கும் குலுக்கல் நடனத்தால் ஒன்றுக்கும் உதவாத திரைப்படத்தை கரை சேர்க்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம் என்பதை சோபாவின் ரசிகக் கண்மணிகள்தான் சொல்லவேண்டும்.
தனது ஆதிக்க சாதிப் பின்புலத்தை மறைத்து, இடஒதுக்கீட்டுக்காக 'தலித்' என்று சாதிச் சான்றிதழ் வாங்கும் சராசரி மனிதர்களை விடக் கேவலமானவர் சோபா சக்தி. இவர் தனது தலித் வேடத்தை, நியாயமான ஒரு போராட்டத்தின் மீது சேறடிக்கப் பயன்படுத்தியிருக்கிறார். தலித் அரசியலை முன்வைத்து, புலிகளை சோபா விமர்சித்தபோது, 'பாதிக்கப்பட்ட ஒரு தலித் சொல்வது சரியாகத்தான் இருக்கும்' என்பதுபோல்தான் தமிழ் இலக்கிய உலகம் அதை எடுத்துக் கொண்டது. இன்றுவரை அ.மார்க்ஸ், சுகன், ஆதவன் தீட்சண்யா, சுசீந்திரன் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்களின் முதல் கோஷமே புலிகள் ஆதிக்கசாதியினர் என்பதுதானே! இந்த தலித் வேடத்துக்கான கூலியாகத்தானே, சோபா எந்த வேலையும் செய்யாமல் கோயில்மாடு போல் திரிய கொடுத்து வைக்கப்பட்டிருப்பது?
இவரது தலித் வேடத்தைக் கலைத்து, இவர் ஒரு ஆதிக்க சாதி வெள்ளாளர் என்பதை இணையத்தில் பலர் அம்பலப்படுத்தியவுடன், 'தான் ஒரு தலித் இல்லை' என்று மிகவெளிப்படையாகச் சொல்கிறார். இதை இதற்குமுன் ஒருநாளும் சோபா பேசியதில்லை என்பதில் இருந்துதான் அவரது அயோக்கியத்தனம் வெளிப்படையாக பல்லிளிக்கிறது.
‘தலித்‘ எழுத்தாளர் தமிழவேளிடம் சோபா பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவரும் சோபாவின் தலித் வேடத்தையும் கைக்கூலித்தனத்தையும் நன்றாகவே அறிந்திருந்தார், சோபாவின் மீது கடுமையான கோபத்திலிருந்தார். அவர் பாரதியின் வரிகளை கொஞ்சம் மாற்றிச்சொன்னார். “வேடங்கள் போடுபவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா“ என்று. அவர் சொன்னது பாப்பாவுக்கு மட்டுமல்ல... அதுபோக சோபாசக்திக்கு கலகக்காரன் என்று ஒரு பட்டப்பெயரை அவரது ரசிகக் கண்மணிகள் கொடுத்துள்ளார்கள். அது உண்மைதான். பொய் சொன்ன வாயிக்கு போசனம் கிடைக்காது என்று சொன்ன பழமொழியை தனது தலித் வேடத்தால் உடைத்து, பொய் சொன்ன வாயிக்கு போசனம் என்ன இலங்கை அரசின் சாராயமும் கிடைக்கும் என்று நிரூபித்த 'புர்ச்சி'கரமான கலகக்காரர் அவர்தான்.
கவின்மலரும் சோபாசக்தியும்: 2020
பின்குறிப்பு- தோழர் கவின்மலரிடம் அவர் எழுதிய கதை பற்றிப் பேச நான் தொடர்புகொண்டபோது அவர் முதலில் நன்றாகப் பேசத் தொடங்கினார். தான் சோபாவை தலித் என்று எழுதவில்லை என்று மறுத்தார். பின்பு கோபமுற்ற அவர், இரண்டு குற்றச்சாட்டுக்களை வைத்தார். அது என்னவெனில் போன கட்டுரையில் நான் சோபாவை தரம் தாழ்ந்து எழுதியதாகவும், அதுபோக அனைவரும் கூட்டு சேர்ந்து சோபாவை தாக்குவதாகவும். போன கட்டுரை மக்கள்மொழியில் கிண்டலும் கேலியும் கலந்து எழுதப்பட்டது. நமக்கு தோழர் கவின்மலர் மீது மரியாதையும் தோழமையுணர்வும் எப்போதும் உண்டு. தோழர் கவின்மலர் வர்க்க மனச்சாட்சியோடு சோபாவின் கட்டுரைகளை வாசித்துவிட்டு பின்பு சொல்லட்டும் யார் தரந்தாழ்ந்து பேசுவது என்று. இரட்டை அர்த்த வசனங்களாலும் படுபச்சையான கொச்சையான வசவுகளாலும் நிரப்பப்பட்டதுதான் சோபாவின் கட்டுரைகள். அவரது கட்டுரைகளை அரசியல் கட்டுரைகள் என்று சொன்னால் அதுவும் இடதுசாரிப் பார்வையில் அமைந்த அரசியல் கட்டுரைகள் என்றால் பேராசான் மார்க்சு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப்போவார். வேண்டுமென்றால் அவரது கட்டுரைகளை நாம் வறட்டுவாதக்கட்டுரைகள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
அதுபோக கவின்மலரின் இரண்டாவது குற்றச்சாட்டு நீங்கள் கூட்டு சேர்ந்து (அதாவது கீற்று மற்றும் என் போன்றவர்கள்) சோபாவை தாக்குவதாக. நாம் தோழர் கவின்மலரைப் பார்த்து கேட்கவிரும்புவது இது ஒன்றுதான். நீங்கள் எந்த விடயத்தில் சோபாவை ஆதரித்தாலும் பரவாயில்லை, ஆனால் தோழர் தமிழச்சி அவர்மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இந்த விடயத்தில் நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? பாதிக்கப்பட்டு, மனதுக்குள் வைத்து வைத்து மருகும் எத்தனையோ கோடி அப்பாவி பெண்களைப் போலல்லாமல், தனக்கு நியாயம் வேண்டுமென்பதற்காக தன்னந்தனியாக இத்தனை நாட்கள் போராடியதோடு, செய்யாத தப்பிற்கு ஒரு பொறுக்கியால் கிடைத்த அத்தனை அவமானங்களையும் துணிச்சலோடு எழுதி நிற்கும் அந்த பெண்ணிற்கு துணையாக நின்றீர்களா? இல்லையே... சோபாசக்தியின் அருகில் நின்று கொண்டு - வீரப்பன் தேடுதல் வேட்டையிலே காவல்துறையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவிப்பெண்கள் நீதிகோரியபோது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டானே ஒரு கிழட்டு நாய் தேவாரம் - அவனைப்போல தோழர் தமிழச்சியிடம் சோபா ஆதாரம் கேட்டதற்கு ஒத்து ஊதத்தானே செய்தீர்கள்? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் தடித்தனம் சோபாசக்தி மாதிரியான பொறுக்கிகளுக்கு வேண்டுமானால் வரலாம், பெண்ணியம் பேசும் கவின்மலருக்கு...? இல்லை இதுதான் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் எப்போதும் கேட்க விரும்பும் கேள்வியா?
'சின்ன வயதில் இருந்தே பழக்கம், அதனால் அரசியலில் இருதுருவங்களாக இருந்தாலும் நட்பு தொடர்கிறது' என்று நீங்கள் சோபாவுடனான நட்பைப் பற்றி சொல்ல முடியாது. ஈழத்தில் பிறந்து, பிரான்சில் வாழும் சோபாசக்தியுடன் ஒத்த கொள்கையன்றி நட்புறவு கொள்வதற்கு வேறு காரணம் இருக்க முடியாது. சோபாசக்தியிடம் காணும் அத்தனை 'புரட்சிகர அம்சங்க'ளையும் நீங்கள் சாரு நிவேதிதாவிடமும் காண முடியும். பெரியார், பெண்ணியம், இந்து மத எதிர்ப்பு, பாலியல் சுதந்திரம், குடி இத்தனையையும் சாருவின் கட்டுரைகளில் இருந்தும் உருவியெடுக்கலாம். சோபாவைப் போலவே, சாருவும் தலித் வேடம் போட்டவர். மலம் அள்ளும் குடும்பத்தில் பிறந்ததாக பீலா விட்டவர். சோபாவின் 'புர்ச்சி'கரத்தன்மைக்கு ரசிகர் என்றால், அதே 'புர்ச்சி'கரத்தன்மை சாருவிற்கும் உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுதான் பெண்ணியம், இப்படி பேசுவதுதான் பெண்ணியம் என்றால் நீங்கள் பேசும் பெண்ணியத்தில் எழவு விழ என்று எங்கள் ஊர் பாட்டிபோல்தான் எனக்கு சொல்லத்தோன்றுகிறது.
தோழர் கவின்மலர், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சோபாசக்தி அடிக்கடி தனது கட்டுரையில் ஒரு சீனப்பழமொழியை தன்னை எதிர்த்துப்பேசும் தனது முன்னாள் நண்பர்களுக்கு சொல்வார். “நீங்கள் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்றிருந்தாலும் திரும்ப வந்துவிடுங்கள்“ என்பதுதான் அது. அந்தப் பழமொழியே ஒரு பிற்போக்கானது. இருப்பினும் அந்தப் பழமொழியை நான் கொஞ்சம் மாற்றிச் சொல்ல விரும்புகிறேன். அன்புத்தோழர் கவின்மலர், "நீங்கள் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்றிருந்தாலும் திரும்ப வந்துவிடுங்கள், அல்லது நீங்கள் செல்லும் பாதை சரியென்றால் எம்மையும் அங்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்." ஏனெனில் நான் மாவோவின் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற கருத்தில் அபார நம்பிக்கை வைத்துள்ளேன். அதே நேரத்தில் நீங்கள் ஒரு சமூகப் பொறுப்புமிக்க தோழர் என்பதையும், தோழர்களாக இருந்து துரோகிகளாக மாறியவர்களின் வரலாறுகள் மக்கள் மன்றம் முன்பாக கொட்டிக்கிடக்கிறது என்பதையும் உங்களிடம் நான் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
தொடர்பான கட்டுரைகள்
1. பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம்
2. ஈழத்தில் சோபாசக்தி செய்த தலித் புலமை மோசடி
3. இச்சா(நாவல்): சோபாசக்தியின் மட்டரக காக்ரெயில்
4. தமிழச்சி சோபாசக்தி உறவு: ஒரு மாற்றுப் பார்வை
Comments
Post a Comment