ராஜேஸ் பாலாவின் சங்கிலிக் கோர்வையான பொய்கள்
சேரன் குழந்தையாக ராஜேஸ் பாலாவின் இடுப்பில் By நட்சத்திரன் செவ்விந்தியன் பிரதம ஆசிரியர் Jaffnafashion.com முன் கதைச்சுருக்கம் புலிகள், PLOTE, EROS, EPRLF, TELO ,ஆகிய 5 இயக்கங்களின் இங்கிலாந்து தலைவி(பிரதிநிதி? ) தானே என்கிற அண்டப்புழுகை ராஜேஸ் பாலா கடந்தவருடம் அவிழ்த்துவிட்டார். கீழுள்ள முதல் கொமன்ரிலுள்ள YouTube இணைப்பில் 11.20 இலிருந்து கேட்டுப்பாருங்கள். அகழ் இணையத்திற்கு இவ்வருடம் வழங்கிய நேர்காணலிலும் ராஜேஸ் பாலா தான் லண்டனில் மேற்கூறிய 5 இயக்கங்களினும் "லண்டன் தலைவியாக " இருந்ததாக புழுகியிருக்கிறார். ராஜேஸ் பாலா காலம் பூராகவும் தன்னைப்பெரிய ஆளுமையாகவும் Public Figure ஆகவும் காட்ட அண்டப்புழுகுகளை அவிழ்த்து விடுபவர். புலிகளின் முதல் பெண்புலியான நிர்மலா ராஜசிங்கம் லண்டனில் தஞ்சமடைய பல ஆண்டுகளுக்கு முதலே 1970 ஆண்டிலிருந்து லண்டனில் வாழ்ந்து வருபவதாகச் சொல்பவர் ராஜேஸ் பாலா. ஆனால் 1980 களின் நடுப்பகுதியில் நிர்மலா இலண்டனுக்கு வந்தபின்னர் நிர்மலா மிகப்பிரபல்யமான ஈழத்தமிழ் பெண்ணாக இலண்டனில் உருவாகிவிட்ட