அன்ரன் பாலசிங்கம் புதிய வரலாற்று தொடர்

(By நட்சத்திரன் செவ்விந்தியன்) அத்தியாயம் ஒன்று 2005 மாவீரர் நாளில் லண்டனில் "ரணில் ஒரு நரியன்" என்று அன்ரன் பாலசிங்கம் உரையாற்றுகிற ஒரு வீடியோவை பார்த்திருப்பீர்கள். இந்த உரையை வழங்குகிறபோது பாலசிங்கம் வன்னியில் செத்துப்பிழைத்து தாய்லாந்து வழியாக லண்டன்சீமைக்கு நடைப்பிணமாக வந்தவர். அவரது மதியுரைஞர் வாழ்நாள் முழுக்க சாராய புகையிலை போதையில் இருந்தவர். சலரோக நோய் முத்தி தன் சிறுநீரகங்களை இழந்து இரவல் சிறுநீரகங்களில் பிழைத்த பாலசிங்கத்தின் உடல் மொழியை கவனியுங்கள். எவ்வளவு கஸ்ரப்பட்டு சேடமிழுத்து அந்த உரையை வழங்குகிறார். இப்போது பாலசிங்கம் உயிர்வாழ்வதற்கு வழங்கப்பட்ட குளிசைகளின் போதையில் இவ்வுரையை வழங்குகிறார். அவரது நாக்கு மட்டுமல்ல உடலும் தள்ளாடுகிறது. கடல்வழியாக தாய்லாந்து வழி லண்டன்போன பிற்காலத்தில் பாலசிங்கம் வழங்கிய பல உரைகள் சபை நாகரீகமற்ற பேச்சுக்கள். ஒரு ராசதந்திரியின் பண்புகளற்றவை. கருணா தாய்லாந்தில் சரக்கடித்ததால்தான் பின்னர் பிரிந்தார்/ ஆனந்த சங்கரியின் உடும்பு றச்சியும் இரண்டு கிழவிகளும்/ சிங்களவனுக்கு மேல்வீடு இல்லை இந்த வகையான விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான குடிகார...