Posts

யார் இந்த யதார்த்தன்

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன்   கடந்த இருவாரங்களுக்கு மேலாக விதை குழுமம் மீது அதன் உறுப்பினர்கள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும்  பாலியல் சுரண்டல்கள் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து பல பெண்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். ஒரு  முற்போக்கான சமூக செயற்பாட்டாளர் அமைப்பாக அறியப்பட்ட விதை குழுமத்தின் தலைவர் கிரிசாந் சிவசுப்ரமணியம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன் இணையத்தில் அளித்த பதில் கட்டுரைகள் அதிர்ச்சியூட்டுமளவுக்கு மட்டும் இருக்கவில்லை. அவை தலைவர் கிரிசாந் தன்னையே குற்றவாளியாக்கும் அளவுக்கு (Self incriminating) இருக்கின்றன. இதைத்தொடர்ந்து Jaffnafashion.com இணையத்தின் புலனாய்வுப் பிரிவு விதை குழுமத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தயாரித்தது. இதில் மூவரின் பெயர்கள் முதலிடத்தில் வந்தன. முதலில் வந்த பெயர் யதார்த்தன்.  பின்வருவது நமது இணையத்தின் புலனாய்வுப் பிரிவு சேகரித்த யதார்த்தனின் கோப்பு.  எப்போது, எங்கே இருவரும் சந்தித்தார்கள் என்கிற தகவல்கள் நமது குழுவுக்கு இன்னமும் வந்துசேரவில்லை. கிரிசாந்தை சந்திக்கும்போது யதார்த்தன் மட்டரகமான வைரமுத்து கவிதைகள

சுவஸ்திகா: அர்த்தமும் அபத்தமும்

Image
  By நட்சத்திரன் செவ்விந்தியன்   "Prabhakaran was a Textbook Fascist"                         - The Economist சுவஸ்திகா: கடந்த 4 வாரங்களாக சமூக வலைத்தளங்களில் “றெண்டிங்” ஆகிக்கொண்டிருக்கும் பெயர். மூன்று வாரங்களுக்கு முதல் அவர் புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பு என்று பேசியதிலிருந்து இவ்வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டபீடம் ஒழுங்கு செய்த அவருடைய பேச்சு “கலைப்பீட மாணவர்களின் எதிர்ப்பு” காரணமாக கைவிடப்பட்டது வரை நல்லதுக்கும் கெட்டதற்குமாக அவர் சமூக ஊடகங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறார். அவருக்கு எதிர்ப்பான கண்டனப் பதிவுகளே அதிகம் வந்தாலும் நியாயம் அவர் பக்கமிருப்பதால் அவர் இந்த சமூக வலைத்தள கவன ஈர்ப்பை சரியாகப் பயன்படுத்துவதற்காக பாசிஸம் என்றால் என்ன என்பதை விரிவாக விளக்குவதோடு  புலிகள் ஏன் பாசிஸ்டுகளாகிறார்கள் என்பதையும்  விரிவான ஆதாரங்களுடன் ஒரு ஆய்வுக்கட்டுரையாக எழுதியிருக்கவேண்டும். அதனை சுவஸ்திகா இன்னமும் செய்யவில்லை.  பாசிஸம் என்ன என்று எளிமையாக விளக்குவதாயின் அது மக்களாட்சி(சனநாயகத்திற்கு) நேரெதிரான ஆட்சிமுறை என்பதிலிருந்து தொடங்கலாம். பாசிஸ ஆட்சியின் குணாதிசயங்களாக சர்வ

கொலையதிகாரம்: ராஜினி திராணகம

Image
  இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது  சஞ்சிகையில் வெளிவந்தது.  ராஜினி கொல்லப்பட்ட போது அவரின் மருத்துவ பீட மாணவனாக இருந்தவரால் எழுதப்பட்டது. எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு 1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம். அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது Free Doom & Free Dump ist our Freedom...? இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு பல வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு பல வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப்

லீனா மணிமேகலையும் விஜயலட்சுமியும்: பேரம் பேசும் காலம்

Image
  லீனா, சோபா உறவு சம்பந்தமாக Jaffnafashion.com விசாரணைப் பத்திரிகையாளர்கள் பின்வரும் ஆவணங்களை சேகரித்தார்கள். இவற்றின் படி விஜயலட்சுமியும் லீனா மணிமேகலையும் தரகு பேரம் பேசுகிறார்கள் என்பது உறுதியானது .  காலாவதியான சோபாவினதும் சீமானதும் ஆண்குறிகளுக்கான நட்ட ஈட்டைக் கோருகிறார்கள். (சென்னையிலிருந்து வினவு, நாகர் கோயிலிலிருந்து காலச்சுவடு கண்ணன்,  சிட்னியிலிருந்து நட்சத்திரன் செவ்விந்தியன்) சீமான் விஜயலட்சுமி விவகாரம் செற்றில் ஆன மையின் ஈரம் காயமுன்னரே லீனா மணிமேகலை சோபாசக்தியை செற்றில் பண்ண பின்வரும் கவிதையை செக் வைத்துள்ளார்.  அந்தோனிதாசன்களுக்கு சதா உங்கள் தழும்புகளையும்  நாடகக் போர்க்கதைகளையும் எத்தனைப் பெண்களுக்கு விற்பீர்கள்? புலிப்பாடல்களை பாடி  தேசம் வெல்லாதுபோனாலும் போகுமிடமெல்லாம் நேசத்தை சுரண்ட வாய்க்கிறது பொய்களின் ஆயுள் வரை உறவு பின் மற்றொன்று பின் இன்னொன்று பின் வேறொன்று கொள்கைகளை ஆணுறையாக பயன்படுத்தினாலும் கரு் உண்டாகி விடுவதில் தான் இயங்கள் தோற்கின்றன உயிரியல் சலுகையை  ஆயிரங்காலத்துப் பயிராக அமோகமாக ஆணாக செய்யும் அறுவடைக்கு ஆர்ப்பரிப்புகள் புதிதல்ல தலைமுறைக்கும் கேட்ட ஓசை த

Mourning Taraki Sivaram

Image
  by  Prof. Quadri Ismail I remember it well and I remember it poorly - the conversation at the Arts Centre Club. It was quite remarkable, actually, in that bar where more than half the regulars were my friends, in that bar where I am sure I had my first drink - either a rum and coke or a gin and lime, certainly, but again I don't know for sure, although I swear I remember who paid for it - that we appear to have had an uninterrupted conversation.      The Author: Sivaram's Uni Mate How do I know that? Because parts of it were published a few days (maybe weeks) later in the pages of The Sunday Times. (On the 27th of September, 1987, for those bibliographically inclined.) I called him Naresh, then, to preserve his anonymity. He was a member of one of the Tamil militant organizations, of that fine generation of Tamil youth that refused to shirk its responsibilities. And more. He was by any standards brilliant. He was that rare undergraduate who, when he dropped names, could back

அசோகமித்திரனை வசைபாடும் சாருவின் வண்டவாளங்கள்

Image
   By அபிலாஷ் சந்திரன்   அபிலாஷால் பத்தாண்டுகளுக்கு முதல் சாருவை மதிப்பிட்டு  எழுதப்பட்ட  இக்கட்டுரை சாரு நிவேதிதாவை மிகத்துல்லியமாகத்  தோலுரித்துக் காட்டுகிறது. அன்று இருந்த சாருதான் இன்றும். சாரு மாறவில்லை. மாறி பச்சோந்தியானது அபிலாஷ் சந்திரன். இன்று அபிலாஷ்  சாரு லாபியிஸ்ட்.  பல சமகால தமிழ் எழுத்தாளர்களின் வறுமை அறிவு வறுமையல்ல. அறவறுமை. சாருவுக்கு அடிக்கிற  சமூக வலைத்தள அல்கோறிதக் காற்றில் தங்கள் பாய்க்கப்பலையும் ஓட்டிவிட வேண்டுமென்ற பக்கா சுயநலன். காலச்சுவட்டிலிருந்து பிரிந்து வந்த லக்ஷ்மி மணிவண்ணனும் மனுஷ்ய புத்திரனும் இதனைத்தான் செய்தார்கள். ஜெயமோகனும் சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது கொடுத்து இதனைத்தான் செய்தார். காலச்சுவடு கண்ணன் மீது  எனக்கு சிலபல விமர்சனங்கள் இருந்தாலும் அறம்சார் கொள்கைசார் அடிப்படையில் அவர் மிகச்சரியாக துல்லியமாக  ஜெயமோகனையும் சாரு நிவேதிதாவையும்  விமர்சித்து அம்பலப்படுத்தினார். தங்கள் பொது எதிரியான கண்ணனை ஒரங்கட்ட லக்ஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் கூட்டு களவாணிகளானார்கள். காலச்சுவடு 1998ல் நடாத்திய விஷ்ணுபுரம் நாவலை மிகச்சர